Sunday, December 20, 2009

ஆத்திகம் பற்றி சில

1. சாமி கும்புடக் கூட காசு கேக்கிறாங்க - காசு இருக்குறவங்களுக்கு ஒரு வரிசை, இல்லாதவங்களுக்கு ஒரு வரிசை - சரியா?

2. உண்டியல்ல காசு போட்டுட்டா நம்ம தப்பெல்லாம் சரியாப் போய்டுமா?

3. தீர்த்தம் சாப்பிடுறவங்க மட்டுமே 75 சதம் சபரி மலைக்கு மாலை போடறாங்களே ஏன்?

4. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நாட்டில் பலர் இருக்க, சாமிக்கு பாலாபிஷேகமும், ஆர்ப்பாட்டமும் தேவையா? (உடனே அரசியல்வாதிகளை உதாரணம் காட்டக்கூடாது)

5. ஆத்திகர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா?

அன்புடன்
கோடீஸ்

6 Comments:

At Monday, December 21, 2009 12:16:00 AM , Blogger ஆரூரன் விசுவநாதன் said...

வந்ததுமே வில்லங்கமா? அவ்வ்வ்வ்வ்வ்...............


வெண்தாடி வேந்தரின் வாரிசே வருக...வருக......

 
At Monday, December 21, 2009 12:18:00 AM , Blogger ஆரூரன் விசுவநாதன் said...

உங்கள் பூளோக காலக் கடிகாரம் அருமை......அதை ஒரு இடுகையாக தனிப் பதிவில் போடுங்கள்

 
At Monday, December 21, 2009 12:39:00 AM , Blogger Kodees said...

ஆரூரன்! க.சீ சிவகுமார் ஏன் வரவில்லையென்று நேற்றே கேட்க நினைத்தேன், மறந்துவிட்டேன். ஏதும் தகவல்?

 
At Monday, December 21, 2009 8:26:00 PM , Blogger Kodees said...

ஒரு அனானி கமெண்டை தவறுதலாக அழித்துவிட்டேன். மன்னிக்கவும். உங்கள் பதிலே என் பதிலும் கூட

 
At Monday, December 28, 2009 1:03:00 AM , Blogger கோவி.கண்ணன் said...

//1. சாமி கும்புடக் கூட காசு கேக்கிறாங்க - காசு இருக்குறவங்களுக்கு ஒரு வரிசை, இல்லாதவங்களுக்கு ஒரு வரிசை - சரியா?//
ஸ்பெசல் டீ யும் சாதா டீ யும் ஒரே காசு இல்லையே :)

//2. உண்டியல்ல காசு போட்டுட்டா நம்ம தப்பெல்லாம் சரியாப் போய்டுமா?//

ம் காசு போட்டுவிட்டும் தப்பு செய்யலாம் ! :)

//3. தீர்த்தம் சாப்பிடுறவங்க மட்டுமே 75 சதம் சபரி மலைக்கு மாலை போடறாங்களே ஏன்?//

ஒரு மண்டலம் தீர்த்தம் சாப்பிடக் கூடாது என்கிற விரதம். அது உங்களுக்கு ஆகலையா ? :)

//4. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நாட்டில் பலர் இருக்க, சாமிக்கு பாலாபிஷேகமும், ஆர்ப்பாட்டமும் தேவையா? (உடனே அரசியல்வாதிகளை உதாரணம் காட்டக்கூடாது)//

அதுக்கெல்லாம் காரணம் இருக்கு, பால் விற்பவர்கள் பிழைக்கிறாங்களே ! :)

//5. ஆத்திகர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? //

ம்கூம் கேள்வி தப்பு, சிலை திருடர்களில் எத்தனை பேர் நாத்திகர்கள் ?

 
At Monday, December 28, 2009 10:27:00 PM , Blogger Kodees said...

//ஸ்பெசல் டீ யும் சாதா டீ யும் ஒரே காசு இல்லையே//

உண்மைதான்,என்னத்தச் சொல்ல!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home